தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Tuesday, Dec 2, 2025 | India
Home / நிதி

இனி 30 வினாடிகள் இல்லை., 15 வினாடிகள் தான்! அதிவேக UPI வெகு விரைவில்...

UPI பரிவர்த்தனைகள் வரும் ஜூன் 16 முதல் வேகமாகவும், குறைந்த பதிலளிப்பு நேரத்துடனும் செயல்பட உள்ளதாக NPCI அறிவித்துள்ளது. இதன் மூலம் பரிவர்த்தனை செயல்பாடு நேரம், மற்ற விவரங்கள் சரிபார்ப்பு நேரம் ஆகியவை குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

News Image

Author: M Manikandan

Published: April 30, 2025

UPI பணபரிவர்தனைகளை கண்காணிக்கும் NPCI  (National Payments Corporation of India)  தங்கள் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்தி அதிவேக மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ள NPCI முடிவு செய்துள்ளது. 

Advertisement

UPI பரிவர்த்தனைகள் வரும் ஜூன் 16 முதல் வேகமாகவும், குறைந்த பதிலளிப்பு நேரத்துடனும் செயல்பட உள்ளதாக NPCIஅறிவித்துள்ளது. இந்த புதிய மேம்படுத்துதல் UPI பயனர்களுக்கு பரிவர்த்தனைகளை மேலும் திறம்பட செயல்படுத்தவும், விரைவாக மேற்கொள்ளவும் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.

குறைந்த பதிலளிப்பு நேரம் : NPCI-ன் புதிய அமைப்பு மூலம் பரிவர்த்தனைகளின் பதிலளிப்பு நேரம் (response time) கணிசமாக குறைக்கப்படும். தற்போது சில பரிவர்த்தனைகள் 5-10 வினாடிகளுக்குள் முடிவடைகின்றன, ஆனால் இது ஜூன் 16 முதல் 2-3 வினாடிகளுக்குள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நேர வித்தியாசம் : 

  • பணம் செலுத்த மற்றும் பணம் பெற விருப்பம் அனுப்ப தற்போதுள்ள 30 வினாடிகள் குறைக்கப்பட்டு 15 வினாடிகளாக மாறும். 
  • பரிவர்த்தனை விவரத்தை சரிபார்க்க தற்போதுள்ள 30 வினாடிகள் குறைக்கப்பட்டு 10 வினாடிகளாக மாறும். 
  • முந்தைய பயனருக்கு அதே பரிவர்த்தனை தற்போதுள்ள 30 வினாடிகளில் இருந்து 10 வினாடியாக குறையும். 
  • UPI முகவரியை சரிபார்க்க தற்போதுள்ள 15 வினாடிகள் குறைக்கப்பட்டு 10 வினாடிகளாக மாறும்.  

தொழில்நுட்ப மேம்பாடு : NPCI, UPI சேவையகங்களின் திறனை மேம்படுத்தி, வங்கிகள் மற்றும் PSP (Payment Service Providers) ஆப்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை சிறப்பாக்கியுள்ளது. இதற்காக புதிய API-கள் மற்றும் நெட்வொர்க் மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

பயனர் அனுபவம் : இந்த மாற்றம் பயனர்களுக்கு காத்திருப்பு நேரத்தை குறைத்து, விரைவான பண பரிவர்த்தனைகளை உறுதி செய்யும். குறிப்பாக, வணிகர்களுக்கு (P2M - Person to Merchant) பரிவர்த்தனைகளில் இது பெரும் முன்னேற்றமாக இருக்கும்.

பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை : வேகம் அதிகரிக்கப்பட்டாலும், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இரு-காரணி அங்கீகாரம் (Two-Factor Authentication) போன்றவை பலப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாகவே இருக்கும்.

Tags:UPINCPIOnline TransactionOnline Payments

No comments yet.

Leave a Comment