வங்கிகளில் பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், பல்வேறு இடங்களில் பாலியல் தொல்லைகள் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்கள் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்தும் AIBEA சங்கத்தினர் IBA-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அகமதாபாத் யூனியன் வங்கியில் இரண்டு பெண் அதிகாரிகள் துணை பிராந்தியத் தலைவரால் சக ஊழியர்கள் முன்பு பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி AIBOC, AIBEA, BEFI, INBOC, AIBOA, NCBE, INBEF, NOBW மற்றும் NOBO வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஒருங்கிணைத்து உள்ளதாக UFBO அறிவித்துள்ளது.
பணவீக்கம், ஏடிஎம்-களின் பராமரிப்பு செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தற்போதுள்ள ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்த NPCI, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த வங்கி ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து வங்கி அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து முன்கூட்டிய வரி பிடித்தம் செய்யும் முறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு AIBOC கடிதம் எழுதியுள்ளது.