நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவோம். அதை யாராலும் தடுக்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை நிரகரிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மனு அளிப்பு போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மனு கொடுக்கப்பட்டது.
மேல்மா சிப்காட் அமைக்க 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், 124 நாட்களாக 11 கிராம மக்கள் போராடிய நிலையில். 7 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் கைதான 6 விவசாயிகள் மீதான குண்டாஸ் இரத்து செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருள் என்ற விவசாயின் விடுதலை வேண்டி விவசாயிகளிடையே கோரிக்கை வலுக்கிறது. முன்பிணை மனுவில் இருக்கும் கருத்துக்கள் பொய்யெனவும், பொதுத்துறை அமைச்சர் மிரட்டியதால் மனுவில் கையெழுத்திட்டோம் என்று பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.
நவ 5 முதல் நடைபெறும் உற்பத்தி நிறுத்த போராட்டம். மின்சார கட்டணம் குறைப்பு பற்றிய கோரிக்கை நிறைவேறினாலும், பஞ்சு விலையை கட்டுப்படுத்த தொடரும் போராட்டம். இந்த சூழலில் ஜவுளி துறையில் இருக்கும் உண்மையான நெருக்கடி வெளிவர தொடங்குகிறது.
ஆவின் பால் கூட்டுறவு சங்கம், தனது சந்தையை விரிவுபடுத்தவும் விற்பனையை அதிகப்படுத்தவும் அரசாங்கத்தால் நடத்தப்படுகிற பால் கூட்டுறவை ( பால் மற்றும் பால் பொருட்களை சந்தைப்படுத்த ஒன்றாக வேலை செய்யும் பால் பண்ணையாளர்களின் குழு) உதவிக்கு அழைத்துள்ளது.
வீழ்ச்சியை நோக்கி செல்லும் உள்நாட்டு வெள்ளை தங்கம். அரசின் பொருளாதார கொள்கைகளால் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ரப்பர் விவசாயிகள். குறைந்தபட்ச ஆதர விலையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அக் 3 ஆம் தேதி ‘நியூஸ் கிளிக்’ ஊடகத்தின் ஆசிரியர் டெல்லி காவல்துறையினரால் ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் அக் 7 - 12 வரை பல்வேறு அமைப்புகளால் போராட்டங்கள் நடைபெற்றது. கைது நடவடிக்கையை எதிர்த்து அக் 18 உச்சநீதி மன்றத்தில் ‘நியூஸ் கிளிக்’ சார்பாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அக் 25 வரை சிறைக்காவலில் இருக்க உத்தரவு.
இந்திய வங்கி இணைப்புகள் மற்றும் கிளை மூடல்களின் எழுச்சி, தேசியமயமாக்கலில் இருந்து தனியார்மயமாக்குவது பற்றிய விவாதத்தை தூண்டுகிறது. பொருளாதார வல்லுனர்களும் வங்கி சங்கங்களும் ஒன்றிணைக்கும் செயல்திறனுடன் போட்டியிடுகின்றன; செயல்திறன் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகின்றன மற்றும் அரசாங்கத்தின் நோக்கங்களை கேள்விக்குள்ளாக்குகின்றன.
செப் 28 முதல் தொடர்ந்து 9வது நாளாக ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையோடு சென்னையில் போராடி வந்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை (SSTA) சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.