- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
TDS விதிமுறையை திரும்ப பெற வேண்டும்., ஊழியர்களே ஒன்றுபடுங்கள்! AIFUCBO அழைப்பு!
TDS எனும் வரி பிடித்தம் தொடர்பாக யூகோ வங்கி நிர்வாகம் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக யூகோ வங்கி ஊழியர்கள் ஒன்றுபட வேண்டும் என AIFUCBO சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 30, 2024
ஒவ்வொரு நிதியாண்டு இறுதியிலும், தனிநபர் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை கணக்கிட்டு வருமான வரி வரம்பை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்துவர். அதில் பலர், தங்கள் நிலையான மாத ஊதியம் பெறுவோரின் வங்கி கணக்கில் இருந்து, TDS எனும் முறைப்படி முன்கூட்டியே வரி பிடித்தம் செய்யப்படும்.
இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் வரித்தொகையை வருமான வரி தாக்கல் செய்யும் போது, கூடுதலாக வரி பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால், வருமானம் குறைவாக இருந்தாலோ அதனை திரும்ப பெற்று கொள்ளலாம். இந்த TDS வரி பிடித்தம் தொடர்பான ஒரு குற்றசாட்டை யூகோ வங்கி நிர்வாகம் மீது யூகோ வங்கி ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
TDS வரிபிடித்தம் தொடர்பாக SBI, BOB போன்ற வங்கிகள் தங்கள் ஊழியர்களின் வாரிசுமையை போக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. ஆனால், யூகோ வங்கி நிர்வாகம் ஊழியர்களின் நலன் கருதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி ஊழியர்கள் இதற்காக ஒன்றிணைய வேண்டும் என AIFUCBO கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையும் AIFUCBO வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அனைத்து UCOITES என குறிப்பிட்டு, ஊழியர்கள் கடனுக்கான வட்டியில்லா சலுகையான ROI தொடர்புள்ள சலுகைகளுக்கு மூலத்தில் கழிக்கப்பட்ட வரியை (TDS) வசூலிக்க யூகோ வங்கியின் நிர்வாகம் சமீபத்தில் எடுத்த முடிவு, எங்கள் பணியாளர்களிடையே குறிப்பிடத்தக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மே 17, 2024 அன்று வருமான வரிச் சட்டத்தின் 17(2) பிரிவின் ஒப்புதல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகம் எடுத்த முடிவால், அடுத்த 4 மாதங்களில் ஊழியர்களின் சம்பளத்தில் வரிபிடித்தம் பிரதிபலிக்கும். இதனால், ஊழியர்களிடையே ஒரு அமைதியின்மை சூழல் உருவாகியுள்ளது.
இதற்கு முற்றிலும் மாறாக, SBI மற்றும் BOB ஆகிய சக வங்கிகள் தங்கள் ஊழியர்களின் இந்த வரிச்சுமையை போக்க ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளன. இதனால், அந்த வங்கி ஊழியர்களுக்கு உரிய வரி சலுகைகள் கிடைத்துள்ளன.
ஒவ்வொரு பணியாளரும் நிறுவனத்திற்கு அளிக்கும் அர்ப்பணிப்பை உணர்ந்து, யூகோ வங்கியின் நிர்வாகம் அதனை பரிசீலித்து பின்பற்ற வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். கடந்த பல ஆண்டுகளாக வங்கி தொடர்ந்து கணிசமான லாபத்தை ஈட்டி வருகிறது. வங்கிக்கு பாதகமான சூழ்நிலையிலும் கடினமாக உழைக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் நல்ல நிலையிலேயே வங்கி உள்ளது.
இந்த பிரச்சினை வெறும் நிதிப் பிரச்சினை மட்டுமல்ல. இது பனியாளர்களின் நல்வாழ்வுடன் பிணைக்கப்பட்ட ஒரு அழுத்தமான பிரச்சினை. எனவே, பணியாளர்களின் உணர்வுகள் மற்றும் நிதி சார்ந்த கவலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சூழ்நிலைக்கு பதிலளிக்கும் விதமாக, கூட்டு நடவடிக்கை திட்டத்தை முன்மொழிந்து AIUCBOF-AIBOC, AIUCBEF AIBEA மற்றும் UCBEA-BEFI ஆகியவற்றின் பொதுச் செயலாளர்களை அணுகினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் முன்மொழிவு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு (NOBO) UFBU வின் ஒரு அங்கம் மற்றும் இருதரப்பு தீர்வுக்கு கையொப்பமிட்டுள்ளது. நமது கூட்டமைப்புக்கு அங்கீகாரம் இல்லை என்று சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். HRMS போர்ட்டலில் செக்-ஆஃப் வசதியை வங்கி எங்களுக்கு வழங்கியுள்ள நிலையில் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் கண்மூடித்தனமாக இருப்பது போல் தெரிகிறது.
அவர்கள் பொது உறுப்பினர்களின் நலனை விட அரசியலை விரும்புகின்றனர் மற்றும் நிர்வாகத்திற்கான கூட்டு அறிக்கையில் எங்கள் கூட்டமைப்பை வேண்டுமென்றே சேர்க்கவில்லை என்பதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இருப்பினும், நாங்கள் மூத்த நிர்வாகத்தை அணுகி, வங்கி சார்பில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களுக்கு தெளிவான அழைப்பினை வழங்கியுள்ளோம். விரைவில் தொடங்கவிருக்கும் போராட்டத்தில் அனைத்து ஊழியர்களும் முழு மனதுடன் பங்கேற்க, தொழிற்சங்கம் வேறுபாடின்றி ஊக்குவிக்கும் வகையில், நாங்கள் தற்போது ஒரு ஒன்றிணைந்தை செயல் திட்டத்தை தயாரித்து வருகிறோம்.
உங்களின் உரிமைகளுக்காக போராட நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதையும், அதற்கான வெற்றிகரமான தீர்வுக்காக கடுமையாக பாடுபடுவோம் என்பதையும் உறுதியளிக்க விரும்புகிறோம். எங்கள் போராட்டத்தின் முதல் கட்டத்திலிருந்தே எங்களுக்கு தேவையான முடிவுகள் வெளிவரவில்லை என்றால், நிலைமையை மதிப்பாய்வு செய்த பிறகு நாங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவிப்பை வெளியிடுவோம். இந்த இக்கட்டான நேரத்தில் UCO வங்கியின் ஒவ்வொரு பணியாளருக்கும் ஒன்றாக நிற்க நாங்கள் அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம் என AIFUCBO-NOBO-BMS சங்கத்தின் பொதுச்செயலாளர் அக்ஷய் குமார் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.