- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஒரு மாநிலம் ஒரு RRB திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பு : DFS செயலாளர் கூறியதென்ன?
ஒரு மாநிலம் ஒரு RRB திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என மத்திய நிதி சேவைகள் (DFS) துறை செயலாளர் M.நாகராஜு தெரிவித்துள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: February 4, 2025
கிராமப்புறங்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடையே வங்கி பரிவர்த்தனை சேவைகளை கொண்டு சேர்ப்பதற்காக பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRB - Regional Rural Banks) உருவாக்கப்பட்டன. இவை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிராம வங்கிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு கிராம வங்கியும் ஒரு ஸ்பான்சர் வங்கியை கொண்டு அதன் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதனை முறைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் முயற்சித்து வருகிறது. ஒரு மாநிலம் ஒரு RRB (One State One RRB) எனும் திட்டம் மூலம் மாநிலங்களில் இயங்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து அதனை ஒரு ஸ்பான்சர் வங்கியின் கீழ் செயல்படுத்தும் வண்ணம் இந்த ஒரு மாநிலம் ஒரு RRB திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது.
இதற்காக கடந்த வருடமே RRB வங்கிகள் ஒருங்கிணைப்பு பட்டியல் தயாராகிவிட்டது என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கடுத்து RRB ஒருங்கிணைப்பு பற்றி எந்தவித செய்திகளும் வெளியாகாமல் இருந்து வந்தது. இப்படியான சூழலில் RRB ஒருங்கிணைப்பு பற்றி மத்திய நிதி சேவைகள் துறை செயலாளர் M.நாகராஜு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பதில் அளித்துள்ளார்.
டெல்லியில் தனியார் செய்தியாளர்கள் நடத்திய நேர்காணலில் மத்திய நிதி சேவைகள் (DFS) துறை செயலாளர் M.நாகராஜு அளித்த பேட்டியில் நிதித்துறை சார்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் ஒரு மாநிலம் ஒரு RRB திட்டம் எந்த நிலையில் இருக்கிறது, அது எப்போது செயலாக்கம் பெரும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நாகராஜு, “ ஒரு மாநிலம் ஒரு RRB குறித்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் சார்பில் விரைவில் வெளியிடுவோம். அநேகமாக அடுத்த வாரம் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிராந்திய கிராமப்புற வங்கி (RRB) நிறுவப்படும்.
கோவாவை பொறுத்தவரை தற்போது அங்கு RRB வங்கி சேவைகள் இல்லை என்பதால் அங்கு புதிய கிராம வங்கி சேவையை தொடங்க மத்திய அமைச்சகம் பரிசீலனை செய்யலாம். ஒருவேளை புதிய RRB அங்கு நிறுவ முடிவு செய்தால், முதலில் அதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்வோம். “ என்று தெரிவித்தார்.
மேலும், “ கோவாவில் ஏற்கனவே அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் (பொதுத்துறை வங்கிகள்) செயல்பட்டு வருகிறது. எனவே இப்படியான சூழலில் கோவாவில் RRB-ன் அவசியத்தை மதிப்பீடு செய்த பிறகே அங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என DFS செயலாளர் M.நாகராஜு தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதமே குறிப்பிட்ட மாநிலங்களில் இயங்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட RRB வங்கிகளை குறிப்பிட்ட ஸ்பான்சர் வங்கிகளின் கீழ் இயங்கும் படியான பட்டியல் என ஒரு செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம் பின்வருமாறு. (இது அதிகாரப்பூர்வ பட்டியல் அல்ல)
- ஆந்திர பிரதேசத்தில் உள்ள 4 கிராம வங்கிகள் (Andhra Pragathi Grameena Bank, Chaitanya Godavari Grameena Bank, Saptagiri Grameena Bank, Andhra Pradesh Grameena Vikas Bank (AP Part)) ஒன்றிணைக்கப்பட்டு கனரா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- பீகாரில் உள்ள 2 கிராம வங்கிகள் (Dakshin Bihar Gramin Bank, Uttar Bihar Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பஞ்சாப் நேஷனல் வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- குஜராத்தில் உள்ள 2 கிராம வங்கிகள் (Baroda Gujarat Gramin Bank, Saurashtra Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் பரோடா ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- ஜம்மு காஷ்மீரில் உள்ள 2 கிராம வங்கிகள் (Ellaquai Dehati Bank, J&K Grameen Bank) ஒன்றிணைக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- கர்நாடகாவில் உள்ள 2 கிராம வங்கிகள் (Karnataka Gramin Bank, Karnataka Vikas Grameena Bank) ஒன்றிணைக்கப்பட்டு கனரா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- மத்திய பிரதேசத்தில் உள்ள 2 கிராம வங்கிகள் (Madhya Pradesh Gramin Bank, Madhyanchal Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் இந்தியா ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- மகாராஷ்டிராவில் உள்ள 2 கிராம வங்கிகள் (Maharashtra Gramin Bank, Vidharbha Konkan Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- ஒடிசாவில் உள்ள 2 கிராம வங்கிகள் (Odisha Gramya Bank, Utkal Grameen Bank) ஒன்றிணைக்கப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- ராஜஸ்தானில் உள்ள 2 கிராம வங்கிகள் (Baroda Rajasthan Kshetriya Gramin Bank, Rajasthan Marudhara Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் பரோடா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- தெலுங்கானாவில் உள்ள 2 கிராம வங்கிகள் (Andhra Pradesh Grameena Vikas Bank (Telangana Part), Telangana Grameena Bank) ஒன்றிணைக்கப்பட்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- உத்திர பிரதேசத்தில் உள்ள 3 கிராம வங்கிகள் (Aryavart Bank, Baroda UP Bank, Prathama UP Gramin Bank) ஒன்றிணைக்கப்பட்டு பாங்க் ஆப் பரோடா வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும்,
- மேற்கு வங்கத்தில் உள்ள 3 கிராம வங்கிகள் (Bangiya Gramin Vikash Bank, Paschim Banga Gramin Bank, Uttar Banga Kshetriya Gramin Bank ) ஒன்றிணைக்கப்பட்டு பஞ்சாப் நேஷனல் வங்கி ஸ்பான்சரின் கீழ் செயல்டும் என்றும் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.