தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Friday, Apr 18, 2025 | India

Home / நிதி

அரசு சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகித மாற்றம் இருக்கிறதா? வெளியான புதிய அறிவிப்பு!

மத்திய அரசு சேமிப்பு திட்டங்களான PPF, தபால் நிலைய சிறுசேமிப்பு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே உள்ள வட்டி விகித முறை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News Image

Author: M Manikandan

Published: March 29, 2025

மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மறு ஆய்வு செய்து புதிய வட்டி விகித அறிவிப்பை அறிவிக்கும். இந்த முறை, 2025-ம் நிதியாண்டு வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாத காலத்திற்கு, PPF மற்றும் தபால் நிலைய சிறு சேமிப்பான NSC போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்ற இல்லை என்று முடிவு செய்துள்ளது. அதாவது, முந்தைய காலாண்டில் இருந்த வட்டி விகிதமே தொடரும் என்பதை குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி பொது நிலையான வைப்பு நிதி PPF-க்கு 7.1 சதவீதமும், தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டத்திற்கு 4 சதவீத வட்டியும் விதிக்கப்படுகிறது.  

பெண் பிள்ளைகளுக்கான சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் உள்ள சேமிப்புகளுக்கு 8.2 சதவீத வட்டி விகிதம் உள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் மூன்றாண்டு வைப்புத்தொகையின் விகிதம் 7.1 சதவீதமாகவே உள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமான SCSS வட்டி விகிதம்  8.2 சதவீதமாக உள்ளது. இது பிற சேமிப்பு திட்டங்களை விட அதிக வருமானத்தை வழங்குகிறது.

ஐந்தாண்டு தொடர் வைப்புத்தொகை திட்டமான RD போன்ற திட்டங்களுக்கு 6.7 சதவீத வட்டி விகிதமும் நிர்ணயம் செய்யப்பட்டு வரும் காலாண்டில் இந்த வட்டி விகிதம் மாறாமல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:SavingsPPFSSY