தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

2.9 லட்சத்தை கடந்த சமூக ஊடக பதிவுகள்.! நாளை கருப்பு பேட்ஜ் போராட்டம்! AIBEA அறிவிப்பு!

வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைளை முன்னிறுத்தி வரும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக பிப்.28-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட உள்ளனர் என AIBEA அறிவித்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 27, 2025

வாரத்தில் 5 நாட்கள் வேலை, வங்கி காலிப்பணியிடங்களில் போதுமான ஆட்சேர்ப்பு, வங்கி ஊழிர்கள் மீதான தாக்குதல்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி United Forum of Bank Unions (UFBU) தலைமையில் AIBOC, AIBEA, BEFI, INBOC, AIBOA, NCBE, INBEF, NOBW மற்றும் NOBO உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

இதன் ஒரு படியாக, ஏற்கனவே எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் #UnitedWeStand எனும் ஹேஸ்டேக் மூலம் தங்கள் கோரிக்கைளை முன்னிறுத்தி பதிவிட்டு வந்தனர். இந்த ஹேஸ்டேக் இதுவரை 2.9 லட்சம் இடுகைகளை கடந்துள்ளது என AIBEA சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர். 

AIBEA சுங்க பொதுச்செயலாளர் C.H.வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிவிப்பில், டிவிட்டரில் (எக்ஸ் சமூக வலைதளம்) UFBU சார்பாக மேற்கொண்ட பிரச்சாரம் 2,90,000க்கும் மேற்பட்ட இடுகைகளை (ட்வீட்) கடந்து வெற்றிகரமாக முடிந்தது. 

வரும், மார்ச் 3, 2025 அன்று நமது கோரிக்கைகளை முன்னிறுத்தி டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். 

எங்களின் தற்போதைய போராட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நமது போராட்டத்தின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை பிரபலப்படுத்தவும், பிரச்சாரம் செய்யவும் சமூக ஊடகங்களில் இன்று (23-02-2025) பிரச்சாரம் செய்ய UFBU அழைப்பு விடுத்திருந்தது. ட்விட்டர்/எக்ஸ் தளத்தில்  இந்த பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக எங்களது பல தொழிற்சங்கங்கள் முன்கூட்டியே தயாராகிவிட்டன. சில இடங்களில், எங்கள் தொழிற்சங்கங்கள் பெரும் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக திட்டமிட்டிருந்தன.

எங்கள் தொழிற்சங்கங்களும் உறுப்பினர்களும் காலையில் இருந்தே பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் "#UnitedWeStand" என்ற பொதுவான ஹேஷ்டேக் பிரபலமடைந்து முன்னணியில் உள்ளது. அன்று முழுவதும் பிரச்சாரம் தொடர்ந்தது. UFBU-ன் மற்ற தொழிற்சங்கங்களும் பிரச்சாரத்தை மேற்கொண்டன.

சமூக வலைதள பிரச்சாரம் முடிவடைந்த நாளின் முடிவில், 2,90,000 க்கும் மேற்பட்ட பதிவுகள் (ட்வீட்கள்) மற்றும் ரீ-ட்வீட்டுகள் வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த காலத்தில் AIBEA அல்லது UFBU மேற்கொண்ட இதுபோன்ற பிரச்சாரங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு புதிய சாதனையாகும்.

இந்த பிரச்சாரத்தில் எங்கள் சமூக ஊடக குழுவினரின் பாராட்டத்தக்க பணிக்காக நாங்கள் வாழ்த்துகிறோம், மேலும், இந்த திட்டத்திற்கு ஊக்கமளித்த எங்கள் அனைத்து தொழிற்சங்கங்க உறுப்பினர்களுக்கும் நன்றி.

அடுத்தகட்ட போராட்டம், பிப்ரவரி 28, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று கருப்பு பேட்ஜ் அணிவது. அனைத்து கிளை அலுவலகங்களுக்கும் பேட்ஜ்கள் வழங்கப்படுவதையும் எங்கள் அனைத்து உறுப்பினர்களும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதையும் உறுதிசெய்யுமாறு எங்கள் அனைத்து சங்கங்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அடுத்த வாரம், திங்கட்கிழமை, மார்ச் 3, 2025 அன்று, பாராளுமன்றம் முன் தர்ணா போராட்டம் நடைபெறும். டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நமது அனைத்து மாநில சங்க உறுப்பினர்களும் பங்கேற்பதை உறுதி செய்ய அனைத்து மாநில கூட்டமைப்புகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.மார்ச் 3 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடைபெறும். என AIBEA பொதுச்செயலாளர் C.H.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

Tags:UnitedWeStand2 Day ProtestUFBUAIBEAAIBEA Protest