பொதுத்துறை வங்கிகளுடன் RBI ஆளுநர் சந்திப்பு! முக்கிய விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை!
பிப்ரவரி மாத நிதிக் கொள்கை மறுஆய்வுக்கு முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பொதுத்துறை வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: January 16, 2025
டிசம்பரில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநராக பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா, பொதுத்துறை வங்கிகளின் (PSB) நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs) மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் தனது முதல் சந்திப்பை ஜனவரி 15இல் நடத்துகிறார். பிப்ரவரி 5-7 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை மதிப்பாய்வுக்கு முன்னதாக, பணவியல் கொள்கைக்கு முந்தைய ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தனது பதவியேற்ற பிறகு, வங்கித் துறையின் தலைவர்களுடன் நடத்தும் முதல் முக்கிய பேச்சுவார்த்தையாகும். இதன் மைய கருத்து, நிதிக் கொள்கை, பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் வங்கிகளின் செயல்திறன் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை பற்றி விவாதிப்பதாகும்.
சந்திப்பு அமர்வுகள் :
இரண்டு பகுதிகளாக நிகழும் இந்த சந்திப்பின் முதல் பகுதியாக முற்பகலில் பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாகிகளுடனும், பிற்பகலில் தனியார் வங்கிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடைபெற உள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழல் :
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2023 ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 5.4% என குறைந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவான நிலையை காட்டுகிறது. அத்துடன், நவம்பர் மாதம் 5.48% என இருந்த நுகர்வோர் விலை குறியீட்டால் அளவிடப்பட்ட பணவீக்கம், டிசம்பரில் 5% மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிசி ரெப்போ விகிதம் :
முன்பு மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 இடையில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய பிறகு, பாலிசி ரெப்போ விகிதம் தற்போதுள்ள 6.5%-ல் நிலைத்திருக்கிறது. சில பங்கேற்பாளர்கள் பிப்ரவரி மாதக் கொள்கை மதிப்பாய்வில் RBI ரெப்போ விகிதங்களை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சி :
வங்கிகளின் கடன் வளர்ச்சி, டிசம்பர் 2023 தேதியுடன் 11.4% என குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது 20.2% ஆக இருந்தது. டெபாசிட் வளர்ச்சி தற்போது கடன் வளர்ச்சியுடன் சமமாக வருகிறது.
பணப்புழக்க நிலைமைகள் :
கடந்த சில காலமாக பணப்புழக்க நிலைகள் இறுக்கமாக இருந்துள்ளன. ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி சந்தையின் தலையீட்டால் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக 85.97 என்ற பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது.
வாடிக்கையாளர் சேவை முக்கியத்துவம் :
மல்ஹோத்ரா வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தடையற்ற பயனர் நட்பு சேவைகளை வழங்குவதில் வங்கிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார் என்றும், இந்த சந்திப்பின் மூலம் வங்கித் துறை சார்ந்த பல்வேறு சவால்களை மதிப்பீடு செய்து, எதிர்கால நடவடிக்கைகளுக்கான திட்டங்களை அமைப்பது முக்கிய நோக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு முடிந்த பிறகு அதில் என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்ற முழு தகவல் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments yet.