தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Monday, Jun 30, 2025 | India

Advertisement

Home / கிரிக்கெட்

தொடர் தோல்வியில் சொதப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ்! இந்த வருஷம் பிளே ஆஃப் செல்லுமா?

தொடர்ச்சியாக இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி 4 போட்டிகள் தோல்வியை சந்தித்துள்ள காரணத்தால் பிளே ஆப் சுற்றுக்க்கு செல்லுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.

News Image

Author: Bala Murugan K

Published: April 7, 2025

Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி  தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கடைசியாக அவர்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இந்தச் சூழலில், "இந்த வருஷம் பிளேஆஃப்க்கு செல்லுமா?" இன்னும் சிறப்பாக அவர்கள் விளையாட என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.

IPL 2025-ல் 10 அணிகள் பங்கேற்கின்றன, ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளை ஆடும். முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெறும். பொதுவாக, 16 புள்ளிகள் (8 வெற்றிகள்) பிளேஆஃப் உறுதி செய்யும் என்று கணிக்கப்படுகிறது, ஆனால் சில சமயங்களில் 14 புள்ளிகளும் (7 வெற்றிகள்) போதுமானதாக இருக்கலாம் இது மற்ற அணிகளின் செயல்பாடு மற்றும் நிகர ரன் ரேட் (NRR) ஆகியவற்றைப் பொறுத்தது.

Advertisement

அப்படி பார்த்தால் இன்னும் ஒரு அணி கூட 14 போட்டிகள் விளையாடவில்லை. இருப்பினும் தற்போது சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்ப்போம். அப்படி பார்த்தல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகள் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்திருந்தால், அவர்களுக்கு இன்னும் 11 போட்டிகள் மீதமுள்ளன. இதில் பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய, குறைந்தபட்சம் 8 வெற்றிகள் தேவைப்படலாம். அதாவது, மீதமுள்ள 11 போட்டிகளில் 8-ஐ வெல்ல வேண்டும் இது சாத்தியமே, ஆனால் கொஞ்சம் சவாலானது.

பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?

வெற்றி சதவீதம் வைத்து பார்க்கையில் 11 போட்டிகளில் 8 வெற்றிகள் என்றால், CSK 72% போட்டிகளில் வெல்ல வேண்டும். தற்போதைய ஃபார்ம் பார்க்கும்போது இது கடினமாகத் தெரிந்தாலும், CSK-க்கு அனுபவம் மிக்க வீரர்கள் (ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா) மற்றும் வலுவான பேட்டிங்-பவுலிங் காம்பினேஷன் இருப்பதால், பழைய ஃபார்மை மீட்டெடுக்க முடியும்.

தோல்விகள் அதிகமாக இருந்தால், NRR முக்கிய பங்கு வகிக்கும். பெரிய வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே NRR-ஐ மேம்படுத்த முடியும். இது CSK-க்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதே சமயம் மற்ற அணிகளின் செயல்பாடு மோசமாக இருந்தது என்றால் நிலைமை மாறும். பிளேஆஃப் வாய்ப்பு CSK-ன் வெற்றிகள் மட்டுமல்ல, மற்ற அணிகளின் தோல்விகளையும் சார்ந்துள்ளது. எல்லா அணிகளும் சமமாக வென்றால், 14 புள்ளிகளுடன் கூட தகுதி பெற வாய்ப்பு உள்ளது,

CSK செய்ய வேண்டியவை

தொடக்கத்தில் ருதுராஜ் மற்றும் ரவீந்திராவின் பங்களிப்பு முக்கியம். தோல்விகளுக்கு பேட்டிங் சொதப்பல் ஒரு காரணமாக இருக்கலாம். சேஸிங் என்றாலே சென்னை பதறுகிறது. எனவே, சேஸிங்கில் எப்படி சிறப்பாக விளையாடவேண்டும் என்பதை தெளிவாக முடிவெடுத்து விளையாடவேண்டும்.

மேலும், CSK இந்த வருடம் பிளேஆஃப்க்கு செல்ல வாய்ப்பு முற்றிலும் மறைந்துவிடவில்லை. 11 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், 8 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளை எட்டினால், அவர்களுக்கு வலுவான வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போதைய சொதப்பல் தொடர்ந்தால், அது கடினமாகிவிடும். CSK-ன் பழைய அனுபவமும், ரசிகர்களின் ஆதரவும் அவர்களை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வரும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள். 

Tags:ipl 2025 playoffRuturaj GaikwadplayoffIPL 2025IPL

No comments yet.

Leave a Comment