- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இன்றும் ஏற்றத்தை கண்ட இந்திய பங்குச்சந்தை! முக்கிய விவரங்கள் இதோ…
ஜனவரி 29-ல் தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 205.85 புள்ளிகள் உயர்ந்து 23,163.10 எனவும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 631.55 புள்ளிகள் சரிந்து 76,532.96 எனவும் நிறைவு பெற்றுள்ளன.

Author: Kanal Tamil Desk
Published: January 29, 2025
ஜனவரி 29 நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 205.85 (+0.90%) புள்ளிகள் அளவுக்கு ஏற்றம் கண்டு 23,163.10 என்கிற அளவில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்று முழுவதும் ஏற்ற இறக்கத்தை கண்ட நிஃப்டி குறைந்தபட்சம் 22,976.50 என்ற அளவிலும் அதிகபட்சமாக 23,183.35 என்ற அளவு வரையிலும் சென்றது.
அதேபோல, மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் நிலவரத்தை பொறுத்தவரையில், இன்று 75,975.80 புள்ளிகள் முதல் 76,599.73 புள்ளிகள் வரை வர்த்தகமானது. இறுதியில், 631.55 புள்ளிகள் உயர்ந்து (+0.83%) 76,532.96 என்ற அளவில் இன்றைய மும்பை பங்குச்சந்தை முடிவடைந்தது.
நிஃப்டி 50 உடன் ஒப்பிடுகையில், மிட்கேப் குறியீடானது இன்று சிறப்பாக செயல்பட்டது. நிஃப்டி மிட்கேப் 5யானது 2.3% வரை முடிவடைந்தது. இதேபோல், ஸ்மால்-கேப் பங்குகள் சற்று உயர்வை கண்டன. நிஃப்டி ஸ்மால் கேப் 100யானது இன்றைய வர்த்தக நாள் முடிவில் 532.05 புள்ளிகள் அல்லது 3.32% அதிகரித்து 16,008.5 இல் முடிந்தது.
எந்தெந்த நிறுவனங்கள் இன்று (ஜனவரி 29) உயர்வை கண்டது, எந்தெந்த நிறுவனங்கள் சரிவை கண்டது என்பது பற்றியும் கீழே காணலாம்…
சென்செக்ஸ் :
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸில் இன்று அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் (+3.29%), விப்ரோ (+2.88%), இன்ஃபோசிஸ் (+2.83%), அல்ட்ராடெக் சிமென்ட் (+2.38%), மற்றும் டெக் மஹிந்திரா (+2.31%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
அதிக நஷ்டம் அடைந்த நிறுவனங்களின் பட்டியலில் பார்தி ஏர்டெல் (-1.19%), மாருதி சுசுகி இந்தியா (-1.18%), ஏசியன் பெயிண்ட்ஸ் (-0.87%), ஐடிசி (-0.55%), மற்றும் ஆக்சிஸ் வங்கி (-0.08%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
நிஃப்டி :
தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் பட்டியலில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (+4.41%), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (+3.47%), டாடா மோட்டார்ஸ் (+3.33%), விப்ரோ (+2.92%), மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி (+2.92%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
அதிக நஷ்டமடைந்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுசுகி இந்தியா (-1.20%), பார்தி ஏர்டெல் (-1.11%), ஏசியன் பெயிண்ட்ஸ் (-0.83%), ஐடிசி (-0.48%), மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (-0.47%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.